வடமாகாணத்திலுள்ள தமிழ் சிங்களம் முஸ்லீம் மூவின மக்களுக்கும் தம்முடைய அபிவிருத்திககள்
Thinappuyal News -0
வவுனியா வடக்கு ஒலுமடு பிரதான வீதியினை வட மாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சர்
பிரதம ரீதீயாக கலந்து ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில்.......
வடமாகாணத்திலுள்ள தமிழ் சிங்களம் முஸ்லீம் மூவின மக்களுக்கும் தம்முடைய அபிவிருத்திககள்
சமனாக அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு வவருவதாகவும் மூவின மக்களுக்கிடையிலாகவும்
ஒற்றுமையை கொண்டு செல்லும் நோக்கோடு இந்த அபிவிருத்தி வேலைகளை சமனாக மேற்கொண்டு
வருவதனால் மக்களுக்கிடையிலான முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளலாம் என அவரது உரையில்
குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை அட்டன் பிரதான வீதியில் சென்.பெட்ரிக்ஸ் கல்லூரிக்கு முன்பாக மூங்கில் தோப்பு உடைந்து விழுந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் பாதிப்படைந்திருந்ததாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் 03.05.2016 அன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் மூங்கில்கள் வெட்டப்பட்டு அகற்றபட்டதன் பின் ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
அட்டன் எபோட்சிலி தோட்டப்பகுதியில் அன்று இரவு இடம்பெற்ற பாரிய இடி தாக்கத்தால் மக்கள் குடியிருப்புகள் அதிர்வுக்குள்ளான நிலையில் அத்தோட்டத்தில் பாரிய மரம் ஒன்றில் இந்த இடி வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது இச்சம்பவத்தில் எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்த பொலிஸார் அவர்களின் குடியிருப்புகளுக்கு இதுவரை எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
கடந்த ஓர் இரு நாட்களாக மலையக பகுதிகளில் ஆங்காங்ககே...
மல்லாவி யோகபுரத்தில் மே தினத்தில் மக்கள் பேரெழுச்சி
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி யோகபுரத்தில் சுமூகவிழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் தொழிலாளர் விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சியின் செயலாளர் நா.தேவகிருஸ்ணண் தலைமையில் மேதின நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.
மே தின நிகழ்வானது மல்லாவி வைத்தியசாலை முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதிவழியாக பேரணியாக சென்று யோகபுரம் விழையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. பேரணியில் சென்றவர்கள் கிராமம் புறங்களில் சாராயக்கடைகளை இழுத்து மூடு, பட்டதாரிகளுக்கு வேலை வழங்கு, அரச அதிகாரிகள்...
அட்டன் மஸ்கெளியா பிரதான பாதையின் நோர்வூட் பகுதியில் இடம் பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயரபி பகுதியில் 03..05.2016 பகல் 2.30 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது
மஸ்கெளியாவிலிருந்து அட்டன் நோக்கி பயணிகளை ஏற்றிவந்த தனியார் பஸ் வண்டியானது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாரினால் பாதையை விட்டு விளகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குளாகியுள்ளது காயமுற்றவர்களில் 12 பாடசாலை மாணவர்களும் 2 ஆசிரியர்களுமாக...
பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராம், நகுலன் மற்றம் தயாளன் ஆகிய விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் கடந்த வாரமளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மூவரும், முறையாக புனர்வாழ்வு பெறாத நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மூவரையும், மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான...
வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
விட்டமின் ஏ, பி, சி, டி,இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான விட்டமின்களும் முட்டையில் உண்டு.
மேலும், தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு.
உடற்பயிற்சியில் நாட்டமுள்ள ஆண்கள், தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் அவர்கள் தினமும் பல முட்டைகளைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு எவ்விதப்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட கபடி வீரர்களில் ஒருவரும், முன்னணி கபடி பயிற்றுவிப்பாளருமாக துரைச்சாமி மதன்சிங், 3வது ஆசிய கபடி (Circle Kabbadi) போட்டிகளில் பங்குபற்றும் இலங்கைக்கான கபடி அணியில் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
2016ம் ஆண்டிற்கான ஆசிய circle கபடி சுற்றுப் போட்டியானது இந்த மாதம் 2ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த சுற்றுப் போட்டியில் பங்குகொள்ளும்...
கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட தவலங்தன்னை நகரத்தில் காணப்படும் பேரூந்து நிலையத்தின் பகுதிகள் கழற்றி அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேரூந்து தரிப்பிடத்தில் நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை, பதுளை, தியத்தலாவ, கதிர்காமம், செல்லும் பேரூந்துகள் நிறுத்தப்படுகின்ற நிலையில், இதனை நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
குறித்த பேரூந்து நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவரினால் கடை தொகுதி ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. இந்த கடைதொகுதி அமைக்கபட்டதினால்...
ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய விஜயத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆந்திரா மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர் குணசேகரனுக்கு 20 ஆயிரம் ரூபா (இந்திய மதிப்பில்) நட்டஈட்டை வழங்க வேண்டுமென ஆந்திரா அசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி மஹிந்த...